நாம் தமிழர் உணர்வை மழுங்கடிக்கும் ரஜினியும் கமலும் !

 


இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் தத்துவக்கொள்கை முழக்கத்தை அண்ணன் சீமானின் பெரு முயற்சியை திசைதிருப்பவும் மழுங்கடிக்க செய்யவும், தமிழர்களை தொடர்ந்து நுகர்வு கலாச்சாரத்தில் சினிமா மாயையில் நிலைத்திருக்கவும் கூத்தாடிகளான ரஜினியும் கமலும் தீவிர அரசியல் களத்தில் இறங்கியிருப்பதனை மெய்ப்பிக்கின்றன.
ஆரியத்திடம் விடுதலைப்பெற்று திராவிடத்தில் அகப்பட்டுக்கொண்ட தமிழர்கள், திராவிடத்தின் மிக முக்கிய அளுமையாக விளங்கிய நுகர்வுப் பண்பாட்டில் சிறையானோம். அதாவது சினிமா மாயையில் இன்றும் தொடர்ந்து திராவிடக்குடும்பத்தின் வழிவந்தவரான ரஜினியும், ஆரியப்பார்ப்பனக் குடும்பத்தின் வழி வந்தவரான கமலும் தமிழகத்தில் மிக முக்கிய இடங்களை தங்களுக்கே உரித்த பாணியில் தக்கவைத்துக் கொண்டு ஆட்சி செய்து வருகின்றன திரையுலகில்.
தமிழர்கள் இனவுணர்வுப்பெற்று இனமான சிந்தனையோடு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி விடக்கூடாதிலும், தொடர்ந்து இருட்டறையிலே தங்கள் தலைவனை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும் என்பதில் இந்த இருவரும் உறுதியுடன் செயல்படுவதை நன்குணர முடிகிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தாக்கத்தினால் தமிழக இளைஞர்களுக்கு மத்தியில் எழுந்துள்ள எழுச்சியினை திட்டம் போட்டே மழுங்கடிக்கும் மறைமுக செயல்திட்டத்தை இவர்கள் இருவரும் போர் போர் என்றும் கோட்டையை நோக்கி நகர்வோம் என திசைதிருப்பும் படலத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவின் திடிர் மரணமும் கலைஞரின் அரசியல் ஒய்வும் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கு சாதகாமக அமைந்துவிடக்கூடாது என்பதில் இவர்கள் இருவரும் கவனமுடம் செயல்படுகின்றனர். தமிழகத்தில் மாற்று அரசியல் புரட்சிக்கு வழிவகுக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு, நுகர்வு கலாச்சார அரசியலை விரும்பும் ரஜினியும் கமலும் எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள். அவ்வகையில் இவர்கள் இருவரையும் எதிர்த்தும் அரசியல் களத்தில் போராட்டத்தினை எதிர்கொள்ள வேண்டும் நாம் தமிழர் படையை கட்டி எழுப்பியிருக்கும் சீமான்.

ஆக்கம் - கரிமா வளவன்
மலேசியா.
1 september 2017
mfur

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே