இனநலன் காப்போம்.
ஈழத்தமிழர் சொந்தங்களுக்கு உரிய நேரத்தில் கைகொடுத்தார் பேராசிரியர் பி.ராமசாமி . இந்தோனெசியாவில் ஆச்சே மாநிலத்தில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர் சொந்தங்களுக்கு தக்க நேரத்தில் உதவிக்கரம் நீட்டி அடைக்கலம் பெற்றுத் தந்த பினாங்கு மாநில முதல்வரின் செயல் மிகவும் போற்றத்தக்கது. சொந்த நாட்டில் வாழ வழியற்று உயிருக்கு அஞ்சி குடும்பத்துடன் தப்பி கடல் மார்க்கம் வழியாக தங்கள் பயணத்தை மேற்கொண்ட அந்த மக்களுக்கு, ஆச்சே மாநில கவர்னரிடம் பேசி அடைக்கலமும், தங்குவதற்கு அனுமதியும் பெற்றுத் தந்துள்ளார் பேராசிரியர் பி.ராமசாமி. அவரின் செயல் உலக வாழ் தமிழர்களின் மத்தியில் நற்பெயரையும் அதே நேரத்தில் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவ ஒரு போதும் ஜனநாயக செயல்கட்சி பின் வாங்காது என்பதைனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியர்கள் பிரதிநிதி என்று மார்தட்டிக் கொள்ளும் மஇகாவினர்கள் அமைச்சரவையில் அதிகாரத்தில் இருந்தும், மனிதாபி...