Posts

Showing posts from June 6, 2021

அகற்றியது நன்று நிலைநிறுத்துவது என்று !

Image
  2017 ஆம் ஆண்டு நடந்த பெயர்மாற்று சர்ச்சைக்கு 2021 ஆம் ஆண்டு நிறுத்திவைப்பு என தீர்வினை பெற்றுள்ளதுதான்  நம்பிக்கை கூட்டணி அரசும் அதன் இந்தியத்தலைவர்களும். 100 ஆண்டுகளை கடந்த வரலாற்றுப்பூர்வ செட்டி திடலின்  பெயரை நிலைநிறுத்த தவறியது மற்றும் நிறுத்திவைப்பு என நாடகம் நடத்தியதுதான் உங்கள் மூன்று தவணை சிலாங்கூர் மாநில நல்லாட்சியின் செயலா ! 2008 இல் செட்டி திடலின் தொகுதிக்குட்பட்டு வெற்றிப்பெற்றவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு மானோகரன் மலையாளம், அதன் பிறகு 2013 இல் அத்தொகுதியில் வெற்றிப்பெற்றவர் இன்றைய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ். இன்று அத்தொகுதி ஜசெக வை பிரதிநிதித்து ஒரு சீனர் மாண்புமிகு டோனி லியோங் வெற்றிப்பெற்றுள்ளார். மேலும், மூன்று தவணை கிள்ளானில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மாண்புமிகு உலக அறிவாளி சார்லஸ் சந்தியாகு என்கிற தியாகு என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 முதல் இன்று 2021 வரை அத்தொகுதியில் நகராண்மைக்கழக உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஜசெகவை பிரதிநிதிப்பவர்கள். தொடர்ந்து இந்தியர்களே பெருவாரியாக நகராண்மைக்கழக...