Posts

Showing posts from August 14, 2016

கவிதைகள்

Image

கைகழுவுவதிலும் கையை முத்தமிடுவதல் வல்லவர்

Image
                                  இது வரை நாட்டில் நடக்காத ஒன்றுதான் !!! சமீபத்தில் மலேசியா நண்பன் நாளிதழில் வந்த துணை கல்வி அமைச்சர் பி.கமலநாதனின் அறிக்கையானது இது வரை இந்த நாட்டில் நடக்காத ஒன்றுதான். அதனை நிறைவு செய்யவும் இது போன்று வரலாற்றுப்பூர்வ சாதனை படைக்கவும் மலேசிய இந்தியர் கங்கிராஸ் கட்சியினால் மட்டுமே சாத்தியம். எத்தகைய பொறுப்புமிக்க சமுதாய உணர்வை தாங்கிய பதிலை கல்வி துணை அமைச்சரான கமலநாதன் வழங்கியுள்ளார்.  பத்தாங்காலி தமிழ்ப்பள்ளியில் 11 வயதே நிரம்பிய அந்த 9 பிஞ்சு குழந்தைகளிடம் ஒர் நாய் தவறான முறையில் நடந்து கொண்ட விவகாரத்தில், ஒரு துணை கல்வி அமைச்சர் வழங்கியிருக்கும் தனது பேட்டியில் இது ஒன்றும் நாட்டில் நடக்காத ஒரு செயல் அல்ல! என்று துளிக்கூட பொறுப்பில்லாத அலட்சியமான முறையில் தந்திருக்கும் பதிலானது அமைச்சரின் உண்மையான கோர முகத்தை காண்பிக்கின்றன. தொடர்ந்து அங்காங்கே ஒரு சில சமுதாய உணர்வுள்ள போராட்டவாதிகள் தமிழ்ப்பள்ளிகளில் எழும் பிரச்சனைகளை கையிலெடுத்து கொண்டுதான் இருக...

கபாலியும் மலேசியத்தமிழர்களும் மகிழ்ச்சி

Image
ஓய்ந்து முடிந்தன ரஜினி மற்றும் பா.இரஞ்சித் இருவரும் ஏற்படுத்திய ஆழிப்பேரலை ஒருவகையாக உலகமெங்கிலும், இன்னும் சொல்லப் போனால் ஆழிப்பேரலையின் தாக்கம் அவ்வுளவு எளிதில் மறைந்துவிடாது. அப்படித்தான் ரஞ்சிட் அவர்களின் கபாலி திரைப்படம் ஏற்படுத்திய தாக்கமும். பலரின் மனங்களில் அது இன்னும் அழியா கலங்கரை விளக்காக எரிந்து கொண்டிருக்கின்றன குறிப்பாக மலேசியத்தமிழர்களின் ஆழ்மனங்களில்.  கபாலி படத்தின் கதைக்களமானது மலேசியத்தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலித்தாலும், உண்மையிலே திரைக்கதையின் தன்மையானது நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட எந்த வகையான போராட்டங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மக்களின் உயிரோட்டமான மெய்யியலாகவே அமையப்பெற்றது. நிஜமாகவே இது இயக்குனரின் தனித்திறமையா அல்லது இயற்கையாகவே அமையப்பெற்றதா என்பது புரியாத புதிர்தான், அப்படி ஒரு வேலை இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமானல் நிச்சயமாக விளக்கம் கேட்பேன்.   (நான் எங்கே போனாலும் என் பின்னால் சாதி வந்து நிற்கிறது) என்று அலட்சியமாக இயக்குனர் தனது பேட்டியில் குறிப்பிட்டது எத்தனை வேதனைக்குரியமான வலியை அவர் தன்னுடைய இளவயதில...