மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !
இந்து அறப்பணி வாரியம் அமைக்கும் வாக்குறுதி தோல்வியா ! மடானி சாதனையா இல்லை சோதனையா ! மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு ! பினாங்கு மாநிலத்தை தவிர மற்றப்பிற பேராக், சிலாங்கூர், நெகிரி, மலாக்கா,ஜொகூர், பகாங் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் இந்து அறப்பணி வாரியம் இன்னும் அமையாதது அம்மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் இந்திய ஹிந்து மக்கள் பிரதிநிதிகளின் தோல்வியை காண்பிக்கின்றன. குறிப்பாக 2018 ஆண்டு நம்பிக்கை கூட்டணியின் வாக்குறுதிகளில் ஒன்றாக பினாங்கு மாநிலத்தை முன்மாதிரியாக கொண்டு, பெருவாரியாக ஹிந்துக்கள் வாழும் மாநிலங்களில் ஹிந்து அறப்பணி வாரியம் அமைக்கப்போம் என்கிற வாக்குறுதி நிறைவேற்றப்படமால் இருப்பது மற்றுமொரு நம்பிக்கை கூட்டணியின் இந்திய தலைவர்களின் தோல்வியை மெய்ப்பிக்கிறது. ஆட்சியில் அமர்ந்து 3 ஆண்டுகளில் நம்பிக்கை கூட்டணி ஆளும் மாநிலங்களில் இந்து அறப்பணி வாரியம் அமைக்கும் முயற்சிகள் மற்றும் தொடக்கப்பணிகள் இன்று நாள் வரையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்கிற கேள்வியும் ஐய்யமும் நாட்டில் வாழும் ஹிந்து மக்கள் சகோதரர்களிடம் கேள்விகளாய் எழுகிறது. அறப்பணி வாரியம் அமைப்போம் ஆலய நிலங்கள் பாதுக்காக்கப்பட...