எம்மக்களே !
அரசியல்
அகதிகளாய்
உரிமையற்ற
ஊமைகளாய்...
காலமாய் களமாய் !
கோனும் கோலும்
சதிராட்டமாட
வெள்ளோட்டக் காட்சிகள்
பொழுதொரு நாள்...
வண்ணமாய் வளம் வர !
முடிவில்லாத
கதைகளுக்கு
முற்றுப்புள்ளியிட
கோமாளிகள்
துணிவதேன்...
வரலாற்றுப்பிழையா !
விடியலும்
புரட்சியும்
சேமப்படையில்
அலுத்திற்று...
அடக்குமுறையால் !
ஒடுக்குமுறைகள்
மரணித்துப்போகாதா !
ஜனநாயக உரிமை
நிலைப்பெறாதா !
வேட்கை விரக்தியால் !
அடிமை சாசனம்
நிரந்திரமா !
மாற்றான் சுதந்திரம்
தான் சுவாசமா...
எம்மக்களே !
ஆக்கம் - கரிமா வளவன்
28.2.2020

Comments
Post a Comment